குடும்பத்தில் புது வில்லியாக மாற இருக்கும் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போதைக்கு வில்லி என்று யாரும் இல்லையென்றாலும் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய கருத்து வேறுபாடு தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது ஐஸ்வர்யா புது வில்லியாக உருவெடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சூப்பர் மார்க்கெட்டை கவனித்துக்கொள்ள தனம் வந்துவிட்டார். ஆனாலும், முல்லையும் கதிரும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றது தற்போது வரைக்கும் ஒரு குறையாகவே இருக்கிறது. மூர்த்தியை கொஞ்ச நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் தனம் சூப்பர் மார்க்கெட்டை கவனித்துக்கொள்ள சென்றுவிடுகிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது வில்லியாக ஐஸ்வர்யா மாற போகிறார்.
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில், இந்த வீட்டிற்கு வரும் போது ஐஸ்வர்யா சூப்பர் மார்க்கெட்டை நன்றாக கவனித்துக்கொண்டதால் அனைவருமே பாராட்டினர். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக சூப்பர் மார்க்கெட்டில் இருந்து விலகி தற்போது முழுக்க வீட்டில் தான் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பிறகு தான் ஐஸ்வர்யா தனது மாஸ்டர் பிளானை நடத்த போகிறார். அதாவது, கண்ணனுக்கு வேலை சம்மந்தமாக 50 ஆயிரம் தேவைப்படுகிறது. அதை குடும்பத்தினரிடம் கேட்கலாம் என முடிவு செய்துவிட்டனர்.
தமிழகத்தில் பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை – ஆட்சியர் புதிய உத்தரவு!
ஏற்கனவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை இருக்கிறது. இந்த சமயத்தில் 50 ஆயிரம் என்பது குடும்பத்திற்கு மிகப் பெரிய தொகையாகும். ஆனால், ஐஸ்வர்யா 50 ஆயிரம் வாங்காமல் 1லட்சமாக வாங்கலாம் என முடிவு செய்கிறார். அதாவது, எத்தனை நாட்கள் தான் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் கெஞ்சி கொண்டு இருப்பது என நினைத்து குடும்பத்தினரிடம் இருந்து மொத்தமாக காசு வாங்கலாம் என ஐஸ்வர்யா முடிவெடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.