‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அதிர்ச்சியில் கதிர்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்த ட்விஸ்டு - கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அதிர்ச்சியில் கதிர்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்த ட்விஸ்டு - கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அதிர்ச்சியில் கதிர்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அதிர்ச்சியில் கதிர்!

சமீப காலமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பம், குழந்தை பிறப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்க இப்போது ஐஸ்வர்யா தான் அடுத்து கர்ப்பமாக போகிறார் என்று மீனா சொன்ன தகவல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

எந்தவிதமான அலப்பரையும், ஆரவாரமும் இல்லாமல் கதையின் போக்கில் பயணித்து கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சமீப காலமாக முல்லையின் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், குழந்தை பிறப்பதற்காக முல்லை சிகிச்சை எடுத்து வர அவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். இதனை பார்க்கும் மீனா அவ்வப்போது கடுப்பாக, தன்னால் என்ன செய்ய முடியும் என நினைத்து ஆதங்கப்பட்டு கொள்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கத்தில், குழந்தை பிறப்பதற்கான சிகிச்சை முடித்து உண்மையில் தனது வயிற்றில் குழந்தை இருப்பது போல முல்லை எண்ணிக்கொள்கிறார். இதை தனது அம்மா, அப்பாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார் முல்லை. இப்போது முல்லை கூறுவதை கேட்கும் போது, எங்கே முல்லைக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுமோ, அப்படி நடந்தால் முல்லை எப்படி அதை தங்கிக்கொள்வார் என்று வேறு கோணத்தில் சிந்திக்க துவங்கி விட்டார் கதிர். இதனால், முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்ற சந்தேகத்திலேயே சீரியலின் கதை சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்து ஐஸ்வர்யாவுக்கு தான் குழந்தை பிறக்கும் என மீனா சொல்வது போல இன்றைய எபிசோடில் சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது. அதாவது, முல்லையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டு வேலைகளை செய்ய சொன்னால் நானும் கர்ப்பமாகி சும்மா உட்கார்ந்து விடுவேன் என தனத்தை செல்லமாக மிரட்டுகிறார் மீனா. தொடர்ந்து, வீட்டில் அடுத்ததாக ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கலாம் என மீனா சொல்ல அப்படி எல்லாம் இல்லை என்று ஐஸ்வர்யா சமாளிக்கிறார். இப்போது கதிர் மற்றும் மீனா சொல்வதை வைத்து பார்க்கும் போது ஒருவேளை முல்லைக்கு குழந்தை பிறக்காதோ என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!