திடீரென கர்ப்பமாகும் ஐஸ்வர்யா – தனக்கு மட்டுமே குழந்தை பிறக்காதா? ஏக்கத்தில் முல்லை!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் முடிந்து வீட்டிற்கு வந்ததும் திடீரென ஐஸ்வர்யா மயக்கம் போட்டு விழுகிறார். அதன் பின்னர் ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்ததும் முல்லை கவலையடையும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை மறுபடியும் செயற்கை முறை சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறை சிகிச்சை எடுத்துக் கொண்டனர். செயற்கை முறை கருவுறுதலுக்கு மட்டுமே 5 லட்சம் வரை குடும்பத்தினர்கள் செலவு செய்துள்ளனர். அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி, வீடு கட்டும் பிளானை பாதியிலேயே நிறுத்தி 5 லட்சத்தை செலவு செய்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் முல்லைக்கு இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கவில்லை. மருத்துவர்கள் ஏற்கனவே இந்த சிகிச்சை வெற்றியடைய கொஞ்சம் தான் வாய்ப்பிருக்கிறது என கூறியிருந்தார்கள். ஒரு வேளை சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். முல்லைக்கு இந்த சிசிச்சை தோல்வியடைந்ததுமே முல்லை மிகவும் மனமுடைந்து விட்டார். குடும்பத்தினருக்கு இவ்வளவு பெரிய கடனை கொடுத்து விட்டோம் எனவும், தன்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை என வருந்தி கொண்டிருந்தார்.
முல்லையின் மனதை தேற்றுவதற்காக குடும்பத்தினர்கள் அனைவரும் முல்லையை பாக்கியாவின் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து சென்றனர். பிறந்தநாள் முடிந்ததும் மீண்டும் குடும்பத்தினர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். பின்பு ஐஸ்வர்யா திடீரென மயக்கம் போட்டு விழுகிறார். ஒரு வேளை கர்ப்பமாக இருக்குமோ என குடும்பத்தினர்கள் அனைவரும் சந்தேகப்படுகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யாவும் கர்ப்பமானதால் முல்லை வருத்தப்படும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.