விவாகரத்துக்கு பிறகு காதலர் தினத்தில் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் – வைரலாகும் பதிவு!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 18 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா:
உலகளவில் நேற்று காதலர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பலர் தங்களுடைய காதலர்களுக்கு பிடித்தமான பரிசுகளை வாங்கி கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை, நடிகர்கள் பலர் தங்களது துணையுடன் அன்பை வெளிப்படுத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவாக பதிவிட்டு இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.
விஜய் டிவி மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
அவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தனுஷ் இரண்டு தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். ஐஸ்வர்யாவும் சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
கோபியின் சூழ்ச்சியால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!
அவர்களின் இந்த முடிவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே சிறிய சண்டை தான் இவ்வளவு பெரிய முடிவுக்கு காரணம் எனவும் அதை சுலபமாக சரி செய்து மீண்டும் அவர்கள் இணைந்து விடுவர் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா ஒரு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் காதலர் தின கேக் ஒன்று இருக்கிறது. அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.