ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வசதி – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவில் தற்போது அனைத்து வங்கி சேவைகளும் ஆன்லைன் மையமாகிவிட்டது. அந்த வகையில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துகிறது. அதனை ஆதார் உதவியுடன் ஏர்டெல் நிறுவனம் செய்கிறது.
ஏர்டெல் வங்கி:
பாரதி ஏர்டெல்லின் துணை நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, இந்தியா முழுவதும் பயனர்களுக்கு வங்கி சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது முக அங்கீகார அடிப்படையிலான சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அதன் படி இந்த சேவையை வழங்கும் முதல் பேமெண்ட் வங்கியாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மாறி இருக்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 500,000 வங்கி புள்ளிகளில் முக அங்கீகார அடிப்படையிலான இ-கேஒய்சி கிடைக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த அங்கீகாரம் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) புதிய பயன்பாட்டைப் பயன்படுத்தி செயலாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கைத் திறக்க ஸ்மார்ட்போன் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த KYC வசதி AI/ML (Artificial intelligence and machine learning) அடிப்படையிலான முக அங்கீகார RD பயன்பாட்டைப் கொண்டுள்ளது. மேலும் உங்களுடைய ஆதார் புகைப்படத்தை தனிப்பட்ட புகைப்படத்துடன் இணைத்து பார்ப்பதன் மூலம் அதில் மோசடிகள் நடைபெறாமல் தடுக்கிறது
Twitter பயனர்களுக்கு இனி வெவ்வேறு கலரில் டிக் – வெளியான முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும் பயனர்கள் புதிய கணக்கைத் திறக்க ஆதார் அடிப்படையிலான OTP மற்றும் கைரேகை பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மெட்ரோ மற்றும் முன்னணி நகரங்களில் டெபிட் கார்டு பயனர்களுக்கு மைக்ரோ ஏடிஎம் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக ஏர்டெல் சமீபத்தில் இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) – தேசிய நிதி மாற்றத்துடன் (NFS) ஒருங்கிணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.