Airtel நெட்ஒர்க் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – தலைமை நிர்வாகி எச்சரிக்கை!
தற்போது KYC மற்றும் OTP மோசடி அதிகமாக நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை:
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. காலத்திற்கேற்ப திருட்டுகளும் நவீன மாயமாகியுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படியாக இருந்தும், ஆங்காங்கே பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. பண்டிகை காலங்களில் வாழ்த்து சொல்வது போன்ற லிங்க் அனுப்பப்பட்டு அதனை கிளிக் செய்பவர்கள் பற்றிய விவரங்கள் முதல் பணம் வரை திருடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் பகுதிநேர ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!
எனவே இது குறித்து பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு KYC மற்றும் OTP மோசடிக்கு எதிராக எச்சரித்துள்ளது. தற்போது பயனர்களின் மொபைல் எண்ணிற்கு KYC சரிபார்ப்பு போன்ற மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது. அதில் இன்னும் 24 மணி நேரத்தில் அவர்களின் எண் மூடப்படும் என்றும் சேவை தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த எண்ணுக்கு அழைக்கவும் என்றும் அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கும். இது போன்ற போலியான செய்திகளை வாடிக்கையாளர்கள் நம்பி ஏமாறுகின்றனர். இது போன்ற செய்திகளை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 3% அகவிலைப்படி உயர்வு – முக்கிய அறிவிப்பு!
ஏர்டெல் அதன் பயனர்களிடம் தங்களது KYC விவரங்கள் அல்லது ஆதார் எண்ணை பகிர்ந்து கொள்ள எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ, மொபைல் அழைப்பை மேற்கொள்ளவோ அல்லது ஏர்டெல் எண்ணைச் சரிபார்ப்பதற்காக SMS அனுப்பவோ ஒருபோதும் கேட்பதில்லை. அதனால் வாடிக்கையாளர்கள் ஐடி, MPIN அல்லது OTP போன்ற எந்த ஒரு தனிப்பட்ட தகவல் அல்லது நிதி தகவல்களையும் போன் கால்கள் அல்லது SMS மூலம் பகிர வேண்டாம் என்று ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியுள்ளார்.