சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த 6 அடுக்கு கொண்ட கார் பார்க்கிங் – அட்டகாசமான வசதிகள்!!
சென்னை விமான நிலையத்தில் ஆறு அடுக்குகளைக் கொண்ட கார் நிறுத்தகம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது இதில் இருக்கும் வசதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
கார் பார்க்கிங்
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2,150 கார்களை நிறுத்தும் வகையிலான கார் பார்க்கிங் நிறுத்தகம் ரூ. 250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. தற்போது இந்த நவீன கார் பார்க்கிங் நிறுத்தகம் நேற்று நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இனி ரேஷன் கடைகள் மகளிர் குழுக்களின் கைகளில்? மத்திய அரசின் புதிய திட்டம்!!
இந்த கார் பார்க்கிங் கிழக்கு,மேற்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு பகுதியானது உள்நாட்டு விமான நிலைய பயணிகளுக்கும், மேற்கு பகுதியானது சர்வதேச விமான நிலைய பயணிகளுக்கும் தங்களின் வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கார் நிறுத்தத்தில் மின்சார வாகனங்கள் charge செய்யக்கூடிய வகையில் 5 பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த கார் பார்க்கிங்கில் பயணிகள் நுழையும் நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன்களை தவறவிடும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 150 அபராதமும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூபாய் 500 அபராதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.