டிச.15 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் – போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!
இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளை கடந்த சில வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தடை விதித்தது. தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து சர்வதேச விமான சேவையை டிசம்பர்-15 முதல் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவை தொடக்கம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருந்தது. தற்போது கொரோனா நோய்க்கான தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதனை மக்கள் செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டன. ஆனால் ஆரம்ப காலத்தில் கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் இருந்தது. தற்போது அநேக இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முகாம்கள் நடத்தப்பட்டன. அதனால் மக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டன. இதனால் நோய் பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டது.
திருப்பூரில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அத்துடன் கொரோனா நோயினை கட்டுப்படுத்த ஊரடங்கு விதி முறைகளும் பின்பற்றப்பட்டன. அதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினார்களை தடுக்கும் விதமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்தது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் மூலமாக கொரோனா நோய் தொற்று பரவும் விகிதம் குறைந்தது. அதனால் மத்திய அரசு இந்த விதிமுறையை கொரோனா நோயின் 1-வது மற்றும் 2- வது அலையின் போதும் பின்பற்றியது. இந்த சர்வதேச விமான நிலையம் உலகின் பிற பகுதிகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ஒரே நாளில் ரூ.368 அதிகரிப்பு!
தற்போது இதனை டிசம்பர் 15ஆம் தேதி முதல் சேவையை தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகள் 3 வகையாக பிரிக்கப்படும் என்றும் அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து. மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை தனித்தனியாக பிரித்து அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் வெளிநாட்டினர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திருக்க வேண்டும் என்ற விதி முறையும் அடங்கும்.