2022 ஆம் ஆண்டில் 546 முறை விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு – மத்திய அமைச்சகம் தகவல்!!
கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 546 முறை விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 215 முறை இண்டிகோ விமானங்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
சமீப காலமாக விமானங்களில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக அவ்வப்போது சில விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தவிர, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் மொத்தமாக 546 தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் பெயர் பட்டியல் திருத்தம்!!
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக விமானபோக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக இண்டிகோவில் 215 முறை தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்பைஸ்ஜெட்டில் 143 முறையும், விஸ்தாராவில் 97 முறையும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் கடந்த ஆண்டில் 64 இடர்பாடுகளையும், கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் 7 மற்றும் மற்றும் ஆகாசா ஏர் விமானங்கள் 6 இடர்பாடுகளையும் சந்தித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.