பிரபல விமான நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு – 1000 காலிப்பணியிடங்கள்!
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி நீக்கங்கள் மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டும் பெரும்பாலான நிறுவனங்களில் பணி நீக்கங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல விமான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக திறமையான இந்தியர்களை பணி நியமனம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் புகழ்பெற்ற டாடா குழுமம் கடந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக இயங்கி கொண்டிருந்த ஏர் இந்தியாவை வாங்கியது. இதனை வாங்கியதை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அதன் செயல்பாட்டை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிதாக 840 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்க தடை நீக்கம் – ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு வெளியீடு!
இந்த 840 விமானங்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் ஆகிய இரு நிறுவனங்களிமிடருந்து வாங்க ஒப்புதல் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு திறமையான இந்திய நாட்டை சேர்ந்த 1000 பொறியாளர்களை நியமனம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக புதிதாக சுமார் 13000 ஊழியர்களை இந்நிறுவனம் பணி நியமனம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, போயிங் நிறுவனமும் ஆண்டுக்கு புதிதாக சுமார் 1500 ஊழியர்களை பணி நியமனம் செய்து வருகிறது.