தமிழகத்தில் சென்னை – ராமநாதபுரம் இடையே விமான சேவை – மத்திய அரசு தகவல்!!
இந்தியாவில் விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் உதான் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை – ராமநாதபுரம் இடையே விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விமான சேவை:
இந்தியாவில் பிரதமர் மோடி முக்கிய நகரங்களை இணைக்கும் முயற்சியாக வந்தே பாரத் எனும் விரைவு ரயில் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது முக்கிய நகரங்களுக்கு 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “உதான்” எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் – ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
இந்த திட்டத்தின் கீழ் விமான சேவை இல்லாத சிறிய நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலில் சிம்லா – டெல்லி, கடப்பா – ஹைதராபாத் நந்தேட்- ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 50 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உதான் திட்டத்தின் கீழ் சென்னை- ராமநாதபுரம் இடையே விமான சேவை தொடங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.