ஏர் இந்தியாவின் விருப்ப ஓய்வு திட்டம் – இரண்டாவது விஆர்எஸ் பெறும் 2100 ஊழியர்கள்!
டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா தன்னார்வ ஓய்வுக்கான திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டுகான இரண்டாவது விஆர்எஸ் 2100 ஊழியர்களுக்கு கிடைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏர் இந்தியா
டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியது முதல் பல நிர்வாக சீர்திருத்தங்களை செய்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இந்த விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கூடுதலாக சில சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இரண்டாவது விருப்ப ஓய்வு குறித்து அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற ஊழியர்கள் நிர்வாக பிரிவில் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். மேலும் 55 வயதிற்கு மேற்பட்ட நிரந்தர பொது பணியாளர்கள் இந்த விருப்ப ஓய்விற்கு தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இரண்டாவது விருப்ப ஓய்வு 2100 ஊழியர்களுக்கு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. விஆர்எஸ் திட்டம் விமான சேவையை மேலும் திறமையாக மாற்றவும் அதன் ஸ்தாபன செலவுகளை குறைக்கவும் உதவும் என ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.