SSLC தேர்ச்சி பெற்றவரா? ரூ.16,530/- சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை!
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது Handyman, Utility Agent and Ramp Driver காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தம் 153 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.16,530/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | AIESL |
பணியின் பெயர் | Handyman, Utility Agent and Ramp Driver |
பணியிடங்கள் | 153 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
AIESL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Handyman, Utility Agent and Ramp Driver பணிக்கென மொத்தம் 153 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Handyman – 109 பணியிடங்கள்
- Utility Agent and Ramp Driver – 44 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
AIESL கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIESL வயது வரம்பு:
01.07.2022ம் தேதியின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
AIESL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Handyman – ரூ. 14,610/-
- Utility Agent and Ramp Driver – ரூ.16,530/-
AIESL தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
AIESL விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST, Ex– servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்றவர்கள் – ரூ.500/-
AIESL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.