தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – AICTE முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளில் வகுப்புகள் துவங்குவதற்கான கால அட்டவணையை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ வெளியிட அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பின் மூலமாகவே படித்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களும் ஆர்வமாக கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும் வரவுள்ள செமஸ்டர் தேர்வுக்கும் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. இந்த கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும் கால அட்டவணைப்படி, தங்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, தற்போது உள்ள இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வு விடுமுறைகள் முடிந்த பின்னர் வருகின்ற செப் 15 ஆம் தேதிக்குள் புதிய வகுப்புகளை தொடங்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, அக்டோபர் 10ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும். கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் வழியாகவும், மாணவர் சேர்க்கையை முடித்து, வருகின்ற அக் 25 தேதிக்குள், முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்று AICTE சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.