பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை – நிதி ஆயோக் உறுப்பினர் கண்டனம்!!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் படிப்புகளில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் சேர மாணவர்களுக்கு கணிதம், இயற்பியியல் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகள்:
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை வழங்க 12 ஆம் வகுப்பில் கணிதம் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பில் இந்த பிரிவுகளில் படிக்காத மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் மார்ச் 12 ஆம் தேதி AICTE வெளியிட்ட அறிவிப்பின் படி, கணிதம், அறிவியல் பாடங்கள் கட்டாயம் இல்லை என அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக AICTE தெரிவித்தது. மேலும் 12 ஆம் வகுப்பில் கணிதம், அறிவியல் எடுக்காத மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என தெரிவித்திருந்தது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினரும், மூத்த விஞ்ஞானியுமான சரஸ்வத்தும் எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில்,” உயிரி மருத்துவம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்கள் இடம் பெறுகின்றனர். அனைவருக்கும் சமஉரிமை என்ற நோக்கில் பொறியியல் துறையில் உள்ள மாணவர்களின் தரத்தை குறைப்பது பெரும் அழிவை தரும். மேலும் மாணவர்களும் அடிப்படை பொறியியல் கல்வியை கற்க முடியாது. எனவே இதுகுறித்து AICTE மறுபரிசீலனை செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.