அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – தலைவர்கள் அஞ்சலி!
அதிமுக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதுசூதனன் :
தமிழகத்தில் அதிமுக கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அவைத் தலைவர் என முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். பிறகு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக உட்கட்சி பூசலின் போது பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்தார்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
இவர் சமீப காலமாக வயது முதிர்வின் காரணமாக அரசு பணிகளில் இருந்து விலகி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்து தன் வாக்கை பதிவு செய்தார்.
TN Job “FB Group” Join Now
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என இன்று காலை தகவல் வெளியாகியது. இந்நிலையில் 80 வயதான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏ.,க்கள், உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் போன்றோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.