அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி – முன்னாள் அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தற்போது காணப்பட்டு வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.
அமைச்சர் பேட்டி
அதிமுக கட்சியில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சிக்கலுக்கு மத்தியில் நேற்று (ஜூன் 23) சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரத்திற்கு தனி தீர்மானம் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
அந்த உத்தரவின் படி, நேற்றைய கூட்டத்தில் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினம் ஒற்றைத்தலைமை தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மற்ற 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனுடன் இந்த ஒற்றைத்தலைமை தீர்மானத்தை வலியுறுத்தி ஜூலை 11ம் தேதியன்று மீண்டுமாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் (Accenture) டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
இந்த சூழலில் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி செய்யப்பட்ட சட்டவிதி திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் கிடைக்காததால் பதவிகள் காலாவதியானது. இதனால் ஓ பன்னீர் செல்வம் பொருளாளராகவும், பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளராகவும் தொடருவார்கள்’ என்று கூறியுள்ளார்.