அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS மனைவி காலமானார் – தலைவர்கள் இரங்கல்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
OPS மனைவி:
தமிழகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகிக்கிறார். இவர் முன்னாள் துணை முதல்வர் ஆவார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சொந்த ஊராக கொண்ட இவர் எம்.ஜி.ஆர் மீது தீராத பற்று கொண்டவர். அவரது கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். அதன் பிறகு பெரியகுளத்தில் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் பதவி வகித்தார். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். மேலும் 2006ம் ஆண்டு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரானார்.
திவால் ஆகும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் – புதிய சட்டம் இன்று அமல்!
அதனை தொடர்ந்து 2006 ம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த காரணத்தால் தமிழகத்தின் முதல்வராக முதன் முறையாக பதவியேற்றார். தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி வயது 63. இவர் கடந்த இரண்டு வாரங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
TN Job “FB Group” Join Now
இந்த செய்தி அறிந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருங்குடி மருத்துவமனைக்கு செல்கிறார்.