சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம் – டிசம்பருக்குள் அதிமுகவின் உட்கட்சி தேர்தல்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி உறுதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உட்கட்சி தேர்தல்:
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததிற்கு பின்னர் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. வழக்கமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடத்தப்படாமல் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வமும் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘இனி அனுமதியின்றி 400 அடிவரை ட்ரோன் பறக்கலாம், லைசென்ஸ் தேவையில்லை’ – மத்திய அரசு!
அதில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்டத்திட்டங்களின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை.அதிமுக சார்பில் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் கட்சி தலைமை நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தேர்தல் ஆணையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே அதிமுக கட்சியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் நிர்வாகிகள் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதை குறிப்பிட்டனர். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அக்கட்சி உறுதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.