தமிழ் வழியில் வேளாண் பட்டப்படிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகள் தமிழ் வழியில் துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் படிப்பு:
தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாடநூல்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இதனால் கிராமபுறத்தில் உள்ள மாணவர்களும், அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாட திட்டங்களை தமிழில் மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2021 – 2022ம் கல்வியாண்டு முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகள் தமிழ் வழியில் துவங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
IPL 2021 அப்டேட்ஸ் – துபாய் பறந்த ஸ்டீவ் ஸ்மித்! டெல்லி கேபிட்டல்ஸ் அசுர பலம்!
இதனையடுத்து வேளாண் பட்டப்படிப்பில் 40 இடங்களும், தோட்டக்கலைப் பட்டப்படிப்பில் 40 இடங்களும் தமிழ் வழியில் சேர்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லுரிகளை தொடர்ந்து வேளாண் மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் வழியில் வேளாண்மை படிக்கும் மாணவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளிலும், 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறத் தகுதி பெறுவர்.
TN Job “FB Group” Join Now
மேலும் வேளாண் அலுவலர் பணிகளில் அனைத்து நிலை அரசு பணிகளிலும் சேர்வதற்கான வாய்ப்பும் தமிழ் வழி கல்வி பெற்றவர்களுக்கு கிடைக்கும். ஆண்டுக்கு 100 வேளாண் அலுவலர்கள் பணி அமர்த்தப்படுவதால், அவற்றில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பணி ஒதுக்கப்படும். ஆண்டுக்கு 20 பேர் வேளாண் அலுவலராக பணியில் சேர முடியும். இதில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் தமிழ் வழியில் கற்றோர்க்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்.