“அக்னிபாத்” திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

0
"அக்னிபாத்" திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம் - மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
“அக்னிபாத்” திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

இந்திய இராணுவத்தில் இளைஞர்களை நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கும் “அக்னிபாத்” திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெறும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அக்னிபாத் திட்டம்

மத்திய அரசு கடந்த வருடம் இந்திய ராணுவத்தில் நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை வெளியிட்டது. முதலில் இந்த திட்டத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என குற்றசாட்டு வைக்கப்பட்டது. ஆனால் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு ஏகப்பட்ட விண்ணப்பங்கள் வந்தது. பலர் இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு – குப்பைகளை கொடுக்க புது விதி! மாநகராட்சி அறிவுறுத்தல்!

வழக்கமாக இந்த திட்டத்தில் முதலில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டு பின் நேர்காணல் நடத்தப்படும். அவ்வாறு நடைபெறுவதால் அதிக அளவிலானவர்கள் முதல் சுற்றில் கலந்து கொள்கின்றனர். . அதனால் தற்போது இந்த திட்டத்தில் ஆட் சேர்ப்பு செய்வதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதலில் நுழைவுத்தேர்வு நடைபெறும் எனவும் அதன் பின் உடல்தகுதித்தேர்வு பின்னர் மருத்துவப்பரிசோதனை ஆகியவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்தகுதி தேர்விற்கு பதிலாக ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடத்தினால், அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கபடலாம் என்ற புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!