அக்னிபத்’ திட்டம்: எதிர்ப்புகளையும் கடந்து குவிந்த விண்ணப்பங்கள் – முழு விவரம் இதோ!

0
அக்னிபத்' திட்டம்: எதிர்ப்புகளையும் கடந்து குவிந்த விண்ணப்பங்கள் - முழு விவரம் இதோ!
அக்னிபத்' திட்டம்: எதிர்ப்புகளையும் கடந்து குவிந்த விண்ணப்பங்கள் - முழு விவரம் இதோ!
அக்னிபத்’ திட்டம்: எதிர்ப்புகளையும் கடந்து குவிந்த விண்ணப்பங்கள் – முழு விவரம் இதோ!

அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர விரும்புவோர், வரும் 24ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முப்படைகளில் சேர எத்தனை பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

‘அக்னிபத்’ திட்டம்:

இந்திய ராணுவத்தில் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராணுவத்தில் 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதன்படி, விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், ஜூன் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 5ம் தேதி வரை அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி முதல் 2005ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரையிலான கால கட்டத்திற்குள் பிறந்தவர்கள் அக்னி வீரர்களாகும் தகுதி படைத்தவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஜூலை 1 முதல் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிரடி உயர்வு? நிதியமைச்சர் விளக்கம்!

மேலும் பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்’ என, விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த இணையதள விண்ணப்பங்கள் ஜூன் 24 காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆறு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை இரண்டு லட்சத்து, ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!