தமிழகத்தில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மே 4ம் தேதி அன்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. அதனால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் காலங்களில் தமிழகத்தில் எப்படி வெயில் இருக்கும் என்று பார்ப்போம்.
வெயிலின் தாக்கம்:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கடந்த மே 4ம் தேதி அன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. இது 25 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நாட்களில் சூரியன் அதிகளவு வீரியமிக்கதாக மாறும். அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும் வெப்பநிலை பதிவாகியது. இதில் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் கடந்த மே 6ம் தேதி அன்று வேலூரில் 105.98 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் 108 டிகிரி வெயில் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. அதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அத்துடன் அசானி புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக அநேக இடங்களில் அக்னி நட்சத்திர காலத்திலும் மழை பெய்தது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழகத்தில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அத்துடன் சென்னை, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது என்பது கடந்த ஆண்டின் ஆய்வுகளை ஒப்பிடும் போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.