விரைவில் அக்னிபாத் திட்டம் குறித்த ஆய்வு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைவர்கள், ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனம் தொடர்பான ‘அக்னிபாத்’ திட்டத்தை கடந்த 13 ஆம் தேதி அறிவித்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம்:
மத்திய அரசு முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை கடந்த 13 ஆம் தேதி அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து நீக்கப்படுவார் எனவும், அவர்களுக்கு பென்சன் எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பின் ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசை உடன் பல ஆண்டுகளாக படித்துவிட்டு இருப்பவர்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர். அதனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை ராணுவத்தில் புகுத்தி பயிற்சி அளிக்க பாஜக திட்டமிடுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ‘இதனை’ பயன்படுத்த தடை! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அந்த மனுவில் அக்னிபாத் திட்டத்தால் தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மற்றும் ராணுவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்