TNPSC குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பு உயர்வு? முக்கிய கோரிக்கைகள்!
தமிழகத்தில் TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் மாதம் வெளியானது. தற்போது விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 30ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயது வரம்பு குறித்த முக்கிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களில் குரூப் 2, 2A, குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் 1 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த குரூப் 1 தேர்வானது துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித் துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடை? நீடிக்கும் மவுனம்!
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தகைய தகுதியுடையோர் http://tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வின் முதல் நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் முதல் தொகுதி பணிகளுக்கு தகுதியான பலர் தேர்வில் பங்கேற்க ஆர்வமாக இருக்கும் பொது வயதை காரணம் காட்டி மறுப்பது நியாயமற்றது. அதிகபட்ச வயது வரம்பு ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அதனால் வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Age limit 40 agalam
Sir age limit (widwo) ingress akkalam