மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு – சூப்பர் அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு வயது அதிகரிப்பு:
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபடுகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக இதுவரை இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் ஓய்வு பெறும் வயது 58 மற்றும் 60 ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு – முதல்வர் அதிரடி உத்தரவு!
அதாவது கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2011 – 16ம் ஆண்டுகளில் உம்மன் சண்டி அவர்களது ஆட்சியில் கடைசியாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு ஓய்வு பெறும் வயதை இதுவரை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – முழு விபரங்கள் இதோ!
அதனால் தற்போது கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை தற்போது உள்ள 56 வயதில் இருந்து 57 ஆக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு 2022 -23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர் K.N பாலகோபால் அவர்களால் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும், இத்தகைய உத்தரவு அமலுக்கு வரும் போது அவர்கள் எதிர்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.