மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு தளர்வு – அரசாணை வெளியீடு!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனால் தற்போது ஒருவருட காலம் கடந்த நிலையில் அரசு தேர்வுகளுக்கு வயது வரம்பு தளர்வு அளித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு தளர்வு:
நாடு முழுவதும் கடந்த கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இந்த பெருந்தொற்று பரவல் காரணமாக அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனால் கடந்த ஆண்டு அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இருந்த பலர் தற்போது வயது வரம்பை கடந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
ஆனால் அரசுத்தேர்வு எழுதுவதற்கான வயது வயது வரம்பை கடந்த பலர் தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் அவர்கள் வயது வரம்பு தளர்வு வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பல முறை மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநில அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு முறை வயது வரம்பில் தளர்வு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதிக்கு இடையில் அரசு பணி போட்டி தேர்வுகளில் பங்கேற்க வயது வரம்பை தாண்டிய அனைவரும் டிசம்பர் 2022ம் ஆண்டு 31ம் தேதி வரை அரசால் வெளியிடப்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநில அரசின் இத்தகைய அறிவிப்பு அரசு வேலை பெற காத்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.