இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடியின் முடிவு என்ன?

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடியின் முடிவு என்ன?

நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று பாதிப்புகள் பெருகி வருவதால், மீண்டும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு:

கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பேரலைத்தொற்று மீண்டும் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லி, மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஏனென்றால் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 4ம் அலைப்பரவல் பாதிப்புகள் உச்சம் தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளதால், இந்த திடீர் பாதிப்புகள் 4ம் அலைக்கான ஆரம்பம் என்று எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாடு முழுவதும் தினந்தோறும் 3000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிராக பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும்  எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் 28 அன்று 2,927 ஆகவும், நேற்று 3,303 ஆகவும் இருந்தது. இதன் மூலம், கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கைகள் கூறுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!