சீனாவில் தினசரி 30,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பாதிப்பு உயர்வுக்கு காரணம் இது தான்!!
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனை தடுக்க அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா:
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தியது. சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளின் விளைவால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.
Follow our Instagram for more Latest Updates
ஒரு வழியாக மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் தற்போது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
குறையும் வேலையின்மை விகிதம்.. மீண்டு வரும் பொருளாதாரம் – நிபுணர்கள் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகம் பாதிப்புள்ள குவாங்ஜியோ மாகாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா வேகமெடுப்பதன் காரணம் குறித்து விசாரித்த போது சீனாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தின் வீரியம் குறைவாக உள்ளது. அதனால் தான் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.