அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி முடிவு!
கொரோனாவின் பிறப்பிடம் ஆன சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஹாங்காங்கில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா தொற்று கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கின. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இன்று வரை இந்த தொற்று பாதிப்பு உள்ளன. இதனால் கடந்த 2 வருடங்களாக தொற்று பாதித்த நாடுகளில் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..!
கொரோனாவை தொடர்ந்து உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஒமைக்ரான் பரவல் காரணம் எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து மத்திய மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள்கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, தெற்கு குவாங்டாங் மாகாணத்திற்கு விரைவில் வர உள்ளனர்
நாளை மறுநாள் (பிப்.14) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீனாவின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை நிலைநிறுத்தாதற்கு கடந்த வாரம் ஹாங்காங் நிர்வாகத்தை சீன அரசு கடுமையாக விமர்சித்து இருந்தது. இந்த வகையில் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.