இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அவசியம் – எய்ம்ஸ் தலைவர் அறிக்கை!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் அவசியம் ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு:
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று பரவி மக்களை மிக அதிகமாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு நாளடைவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. தற்போது நாட்டில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுக்க துவங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஏப்ரல் மத்தியில் கொரோனா உச்சம் அடையும் – விஞ்ஞானிகள் கணிப்பு!!
தற்போது இது குறித்து எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் அனைவரும் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். கடந்த 6 மாதத்தில் இல்லாத பாதிப்பு தற்போது நாட்டில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்தை தாண்டி வருகிறது. தற்போது இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் சிறிய அளவில் ஊரடங்கு விதிப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.