புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – அரசாணை வெளியீடு!

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு - அரசாணை வெளியீடு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு - அரசாணை வெளியீடு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். தற்போது இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஒவ்வோர் ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில், கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 6ம் தேதி அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தது.

தமிழகத்தில் ஜன. 10 மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

இதையடுத்து மீண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, உச்ச நீதிமன்ற வழிமுறைகள் பின்பற்றப்படவில்லையென மீண்டும் ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதன்படி போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!