பல நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!
பல நாட்களாக தங்கத்தின் விலை, குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றம் நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு பெரும் கவலையை உருவாக்கி உள்ளது.
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை:
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை பொறுத்தே மக்கள் மத்தியில் தங்கத்தை வாங்குவதற்கான ஆர்வம் உள்ளது என்றே கூறலாம். அதே போல் வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்று குறைந்த அளவுக்கே இந்த விலை இன்று ஏற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வரும் வரை தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்குகாணப்படும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரு அறிவிப்புகளும் இந்த வாரம் வெளியாகும் போது, உலகப் பங்குச்சந்தையிலும் தங்கம் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த அரசு – 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!
Exams Daily Mobile App Download
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.62.30ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.62,300 ஆகவும் விற்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்