1 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திட்டம்!

0
1 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு திட்டம்!
1 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு திட்டம்!
1 முதல் 8ம் வகுப்பு வரை தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு திட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், சமீபத்தில் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்துள்ள நிலையில், ஆரம்பநிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு குறைந்து வந்ததால் பள்ளிகள் திறக்க அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் குறைந்து உள்ளதால் பள்ளிகள் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள உயர்கல்வி வகுப்புகளான 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான த்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற 5 மாநிலங்கள் பள்ளிகளை திறந்த பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், செப்டம்பர் 26ம் தேதி PTET, D.El.Ed உட்பட SI போன்ற பல போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. RPVT, விவசாய மேற்பார்வையாளர், கல்லூரி விரிவுரையாளர், REET உட்பட மாநிலத்தின் போன்ற மாநிலத்தின் முக்கிய தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. செப்டம்பர் 26ம் தேதி நாடாகும் ரீட் தேர்வை மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேர் எழுத உள்ளனர். முக்கிய போட்டித் தேர்வுகள் நடக்கும்போது பள்ளி மாணவர்களையும் நிர்வகிப்பதில் சிக்கல் உள்ளதால், தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!