சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை – பிரதமர் வெளியீடு!

2
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை - பிரதமர் வெளியீடு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை - பிரதமர் வெளியீடு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை – பிரதமர் வெளியீடு!

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75 – வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு வீடுகளில் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் புதுவையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசியக்கொடி தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.

தேசிய கொடி:

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டுக்காக ரத்தம் சிந்திய வீரர்களையும் உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூறும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாட்டின் 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு 2022ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளார். மேலும் வீடுகள் மட்டுமில்லாது மற்ற பொது இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இந்தாண்டு வழக்கத்தை விட தேசியக் கொடி விற்பனை அதிகரித்துள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் இரவு பகலாக தேசிய கோடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோரும் சுமார் 2000 தேசியக்கொடிகள் தயாரித்து வந்த நிலையில் இந்தாண்டு 5 லட்சம் கொடிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மறைமலைநகரில் மட்டும் 42 சுய உதவிக்குழு பெண்கள் 2 லட்சம் கொடியை தைக்க வேண்டும் என்று நோக்கோடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அமைக்கப்படுமா? விரைவில் அறிவிப்பு!

கந்தர்வகோட்டை,குன்றாண்டார் கோவில், தேனி அமராவதி, திருவரங்கம் போன்ற அனைத்து ஒன்றியங்களிலும் தேசியக் கொடி தைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. சுதந்திரம் முன்னிட்டு வீட்டில் இந்திய கொடி ஏற்றுவது போல், இந்திய மக்கள் எல்லோரும் நாட்டில் அதிவேகமாக உயர்ந்து வரும் விலைவாசி, வேலைவாய்ப்பு இன்மை, மிதமிஞ்சிய ஜிஎஸ்டி வரி, கேஸ், பெட்ரோல்,டீசல், சமையல் எண்ணெய், மருத்துவம், கல்விசாலை மிதமிஞ்சிய கட்டணம், மின்சார கட்டணம், கட்டுமான பொருட்களின் உயர்வு ஆகியவற்றை பிஜேபி அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் “கறுப்பு கொடி” ஒவ்வொரு வீட்டிலும் பிஜேபி ஆட்சி ஒழியும் வரை கட்டவேண்டும்.

  2. நம் நாட்டில் எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் கஸ்டபட்வங்கள் இருக்கிறார்கள் அவர்கள் முன்னேறுவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்பட்டன இந்த சலுகைகள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் விட்டுகொடுக்கவேண்டும்.மத்திய மாநில அரசுகள் மீது கூறை கூறுவதை விட ( வசதி படைத்தவர்கள் விட்டு கொடுத்தால் போதும் ஏழைகளுக்கு உதவும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!