தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் விளம்பரம்? அரசின் புதிய திட்டம்!
தமிழகத்தில் போக்குவரத்து துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
போக்குவரத்து கழகம் அறிவிப்பு:
தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தின் கீழ் 1100 விரைவு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஏற்கனவே தனியார் பேருந்துகளுக்கு நிகராக பார்சல் சேவையை தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி சென்னை மாநகர பஸ்களின் பின்புறத்திலும், டிரைவர் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் குறைந்த அளவிலேயே வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பஸ்சின் 2 பக்கமும், தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் அரசு பஸ்களில் 2 பக்கவாட்டியும் விளம்பரம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து போக்குவரத்து கழகம் கூறுகையில், சென்னை மாநகர பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
TN TET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக. 20) ஆன்லைன் மாதிரி தேர்வு!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த அறிவிப்பினை தொடர்ந்து 3000 பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணிகளின் இருக்கைக்கு பின்புறம், வெளிப்புற கண்ணாடிகள் மூலம் விளம்பரம் செய்துகொள்ள ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒலி மூலமும் விளம்பரம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்க அரசு முயற்சி மேற்கொள்ள உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்