மாதம் ரூ.5 ஆயிரம் பென்சன் வாங்க அருமையான திட்டம் – முழு விபரம் இதோ!!
பிரதமர் மோடி அவர்களால் 2015ம் ஆண்டு அடல் பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சேருவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.5000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடல் யோஜனா பென்ஷன் திட்டம் :
ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலம் குறித்து பல திட்டம் வைத்திருப்பர். வருங்காலத்திக்கு தேவையான பணத்தை சேமித்தும் வைப்பர். இளமை காலத்தில் உழைத்து வரும் காலத்தில் வாழ திட்டமிடுவர். வயதானவர்களால் கடுமையமாக உழைக்க முடியாது அவர்களது உடம்பு அதற்கு ஒத்துழைப்பு அளிக்காது. இந்த முதுமை காலத்தில் அவர்களது சேமிப்பு மட்டுமே அவர்களுக்கு உதவும்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2015ம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதுமை காலத்தில் வயதானவர்கள் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பணம் பெற்று வாழ வழிவகுக்கிறது. இத்திட்டத்தில் 18 வயது நிரம்பிய மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் சேரலாம். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. வங்களில் கணக்கு வைத்து மூலமாகவே விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அடல் பென்ஷன் திட்டத்தில் இணையலாம்.
கொரோனா பணியாளர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – மத்திய அரசு அறிவிப்பு!!
இதற்கு ஆதார் மற்றும் உங்களது தொலைபேசி எண் கட்டாயமாகும். மாதம் ரூ.210 மட்டும் 60 வயது வரை செலுத்தி வர வேண்டும். வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும் சிறப்பு திட்டம் அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும். 60 வயது முடிந்த பிறகு உங்களது ஓய்வு காலத்தில் மாதம் 5000 பென்ஷன் தொகையாக வழங்கபப்டும். இத்திட்டத்திற்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 சிசிடி கீழ் வரிச்சலுகைகளும் கிடைக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்