தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்படும் போது போலி என்று தெரிய வந்தால் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க உயர்கல்வித்துறை ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
CBSE 10 & 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல் – புதிய அறிவிப்பு!
அதில் கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள் விவரங்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் கல்லூரிகளின் சேர்க்கை குழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எக்காரணம் கொண்டும் மாணவர்களை கல்லூரிகளுக்கு வர வைத்தல் கூடாது. அனைத்து பாடப்பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் விண்ணப்ப பதிவின் போது மாணவர்கள் தங்களின் 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த சான்றிதழ்கள் அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தின் மூலம் சரிபார்க்கப்படும். போலி சான்றிதழ்கள் சமர்பித்திருப்பது தெரிய வந்தால் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும். மேலும் அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். அதனை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குநரின் அனுமதி பெற்று கூடுதல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.