தமிழக அரசு பள்ளிகளில் நவம்பர் வரை மாணவர் சேர்க்கை – அனுமதி வழங்கல்!
நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், நவம்பர் மாதம் வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்ப பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து 9, 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தீவிர ஆலோசனைக்கு பின்னர் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – நவ.8 முதல் அனுமதி!
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாற்றியுள்ளனர். பல லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களை தக்க வைப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக பணிகளை அரசு முன்னதாக மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை!
தற்போது, நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை முழுமையாக திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாமல் படிப்பை பாதியில் விட்டு தவிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அதிக மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பிருப்பதால் நவம்பர் மாதம் வரையிலும் மாணவர் சேர்க்கை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.