தமிழகத்தில் 7 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி – மத்திய அரசு!
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டது உள்ள 7 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் இந்த ஆண்டில் தொடங்கும் என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து விளக்குவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் 2006 ஆம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்ததாகவும், அடுத்து ஆட்சிக்கு வந்த அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை எனவும் பத்து ஆண்டுகளாக தவிர்க்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் நாளை தொடங்கப்படுவதாகவும் கூறினார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு பணிகள் தொடக்கம்!
மேலும் இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1240 முகாம்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த முகாமில் பொது, அறுவை சிகிச்சை, குழந்தை, மகப்பேறு என 16 சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் உள்ள புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 7 கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஸ்மார்ட்போன், ஆனால் ஒரே WhatsApp – சூப்பர் அப்டேட்! பயனர்கள் கவனத்திற்கு!
அதன்படி விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டி ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மாணவர் சேர்க்கையும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கையும் மொத்தமாக 850 மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் மீதமுள்ள 4 மருத்துவ கல்லூரிகள் உள்ள சிறு குறைபாடுகளை களைந்து மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.