தமிழகத்தில் ஐஐடிகளில் பி.எட் படிப்பு – விரைவில் மாணவர் சேர்க்கை! மத்திய அரசின் சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட் படிப்புகளின் கல்வி தரம் குறைந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐஐடிக்களில், ஆசிரியர்களுக்கான பி.எட் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பி.எட் படிப்பு
தமிழகத்தில் 91 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 71 நிலையங்களை, ‘தொழில் 4.0’ தரத்தில் நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நிறுவனம் – புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே தலைமைச்செயலகத்தில் தமிழக அரசால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு சிறந்த முறையில் நவீன பயிற்சிகள் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
இதையடுத்து தற்போது தமிழகத்தில் பி.எட் படிப்புகளின் தரம் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் பெரும்பாலான கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 700 கல்வியியல் கல்லுாரிகளும் அத்துடன் இந்தியா முழுதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் தேசிய தர வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. அத்துடன் இதில் தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள் இருப்பதில்லை என்றும் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்காமலும் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ஓர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டிக்களில் நடப்பு ஆண்டில் பி.எட் படிப்பை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் ஒரு சில ஜஜடிகளில் இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் கல்வியாண்டில் அனைத்து ஐஐடிகளில் பி.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.