அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 450-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ, எம்.இ உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் சேர்க்கைக்குண்டான அறிவிப்பை தற்போது அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாக சரியாக பாடம் கற்பிக்காத காரணத்தினால் தற்போது வெகு விரைவாக பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பள கணக்கீடு இதோ!
இந்நிலையில் அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 450-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ, எம்.இ உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதே போல இந்த ஆண்டும் கவுன்சிலிங் எந்த தேதியில் இருந்து நடக்கும் என்பதற்கான அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொது கவுன்சிலிங் இல்லாமல் வேறு ஒதுக்கீடுகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான அட்டவணையை அண்ணா பல்கலை கழகம் நேற்று வெளியிட்டது. பி.இ., பி.டெக் கவுன்சிலிங் சேர்க்கைக்கு ஜூன் 24 ல் விண்ணப்ப பதிவு துவங்கி ஜூலை 15ல் முடிவடைகிறது. மேலும், பிற மாநில பிரிவினருக்கு ஜூலை 6 ஆம் தேதியும், வெளிநாடுவாழ் தமிழரான என்.ஆர்.ஐ பிரிவினருக்கு ஜூன் 24 ஆம் தேதியும் விண்ணப்ப பதிவு துவங்க இருக்கிறது. ஐந்தாண்டு படிப்புக்கு ஜூன் 22 ஆம் தேதியும், தொழில் துறை ஒதுக்கீடுக்கு ஜூன் 26 ஆம் தேதியும், வெளிநாடு வாழ் பிரிவினருக்கு ஜூன் 27ம் தேதியும், எம்.சி.ஏ, எம்.பி.ஏ படிப்புகளில் தொழில் துறை ஒதுக்கீடுக்கு ஜூன் 15 ஆம் தேதியும், எம்.சி.ஏ பிற மாநிலத்தவருக்கு ஜூன் 15 ஆம் தேதியும் மற்றும் வெளிநாடு வாழ் பிரிவினருக்கு ஜூன் 27ம் தேதியும் விண்ணப்ப பதிவு துவங்க இருக்கிறது. மேலும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் படிப்பில் தொழில் துறை ஒதுக்கீடுக்கு ஜூலை 31 ஆம் தேதியும், வெளிநாடு வாழ் பிரிவினருக்கு ஜூலை 27ம் தேதியும் விண்ணப்ப பதிவு துவங்க இருக்கிறது.