5 வயது பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு பள்ளியில் அட்மிசன் – அரசு திடீர் அறிவிப்பு!
இந்த கல்வியாண்டு நிறைவடைந்து அடுத்த கல்வியாண்டுக்கான அட்மிசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 5 வயது பூர்த்தியாகியிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளியில் அட்மிசன் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
பள்ளியில் அட்மிசன்:
தற்போதெல்லாம் குழந்தைகள் பிறந்து சில வருடங்களிலேயே பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். இந்நிலையில் எந்த வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிற வாக்குவாதம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகத் தான் பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமல்லாமல் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று கொண்டிருக்கிறது. குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பிவிடுகிறார்கள். இதனால் கேரள அரசு ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, 5 வயதிற்கு குறைவாக உள்ள மாணவர்களை பள்ளியில் சேர்க்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயது பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே ஆரம்ப பள்ளியில் சேர்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை வகுப்பில் 3 வயது பூர்த்தியாகியிருந்தால் சேர்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 வது தேர்ச்சி பெற்றவரா? மாவட்ட சுகாதார சங்கத்தில் காத்திருக்கும் அரசு வேலை..!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை அட்மிஷன் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில வழி கல்வியில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்