தமிழக அரசின் விடுதிகளில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழக அரசின் விடுதிகளில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக அரசின் விடுதிகளில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக அரசின் விடுதிகளில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆதி திராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பாக 1324 தங்கும் விடுதிகள் இயங்கி வருகிறது. இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் 20ஆம் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதி திராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • 4ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களில் கிறிஸ்தவ மாணவர்கள் 85% பிற்படுத்தப்பட்ட மாணவர் 10% பிற வகுப்பினர் 5% என்ற அடிப்படையில் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  • மேலும் விடுதியை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் வீடு பள்ளிக்கும் வீட்டிற்கும் 5 கீ. மீ தூரத்தில் இருக்க வேண்டும்.
  • பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • மாணவர்கள்தாங்கள் கல்வி பயிலும்‌ பள்ளி தலைமையாசிரியர்‌, கல்லூரி முதல்வரின்‌ சான்று இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.
  • விண்ணப்பபதிவத்தில் பள்ளி மாணாக்கருக்கு EMIS எண்‌ மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்களுக்கு மத்தியமாநில அரசால்‌ கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பதிவு எண்‌ இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  • அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்‌ .
  • பெற்றோரை இழந்த மாணவர்கள்‌ மற்றும்‌ தாய்‌ அல்லது தந்‌தை வெளியூர்களில்‌ பணிபுரிந்து பாதுகாவலர்‌ பொறுப்பில்‌ இருக்கும்‌ மாணவர்களுக்கும்‌ மேற்படி நிபந்தனை பொருந்தாது.
  • விடுதியில்‌ தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும்‌ மாணாக்கர்‌ மற்றும்‌ அவர்களின்‌ பெற்றோர்களிடம்‌ விடுதியில்‌ உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக்‌ கட்டுப்பாட்டுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!