மதுரை காமராஜர் பல்கலை மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!
மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 21ம் தேதி முதல் முடிவடைவதாக இருந்த நிலையில், தற்போது தமிழக உயர்கல்வித்துறையின் அறிவிப்பால் மாணவர் சேர்க்கையை ஜூலை 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் கடந்த திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் சூழல் இல்லாததால் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இருப்பினும், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு மதிப்பெண்கள் அவசியம் என்பதால், மாற்று முறையில் மதிப்பெண் வழங்க அரசு முடிவு செய்தது.
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – நடவடிக்கை எடுக்க உத்தரவு!
அதன்படி, இறுதி செய்யப்பட்ட மதிப்பெண்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டு, இறுதி மதிப்பெண்கள் மட்டும் பதிவிடாமல் பெறப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை ஜூலை 21ம் தேதியுடன் முடிவடைவதாக அறிவித்த நிலையில், தற்போது ஜூலை 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.