தமிழக தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பட்டய படிப்புக்கான கல்வித்தகுதி, பயிலுதவித் தொகை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதுநிலை பட்டயப் படிப்பு:
இரண்டு ஆண்டு காலை முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதிதாக தொடங்கும் இந்த பட்டயப் படிப்புக்கான கல்வித்தகுதி மற்றும் உதவித்தொகை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதுநிலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 கடைசி நாள்!
பயிற்று மொழியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 20 இடங்கள் உள்ளது. மேலும் இந்த பட்டயபடிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு பயிலுதவித் தொகை ரூ.5,000 வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கல்வித்தகுதி, இனம் மற்றும் நிழற்படம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பத்தினை நிறைவு செய்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகலுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
பெரியார் பிறந்த தினமான செப்.17ம் தேதி ‘சமூக நீதி’ நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்களை www.tnarch.gov.in என்ற தொல்லியல் துறை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆணையர் (மு.கூ.பொ), தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600008 என்ற முகவரிக்கு இதற்கான விண்ணப்பங்களை 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.