கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இன்று முதல் 1ம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுவதில் அதிகம் சிக்கல் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. ஆனால் 2020 இறுதியில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பின்பு மீண்டும் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக தற்போது பெரும்பாலான இடங்களில் ஆன்லைன் வழி கல்வி தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான (2021-2022) மாணவர் சேர்க்கையை கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் துவக்கியுள்ளது. இந்த கல்வி நிறுவனம் மத்திய அரசுக்கு உரியதாகும். இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளி மாணவிக்கு மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தற்போது முதல் கட்டமாக 1ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மிக ஆர்வமாக தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை உள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்ப்பதற்கு https://www.kvsonlineadmission.kvs.gov.in/ என்னும் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் போன் மூலம் பதிவு செய்வதற்கு https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.