பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – சிப்பெட் நிறுவனத்தில் துவக்கம்!!
மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தில் அதற்கான பணிகள் துவங்கி உள்ளது.
மாணவர் சேர்க்கை:
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ‘சிப்பெட்’ சென்னையில் உள்ள கிண்டி பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மாணவர்களுக்கு இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்நிறுவனத்தில் பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (டிபிடி), பிளாஸ்டிக் வார்ப்புருத் தொழில்நுட்பம் (டிபிஎம்டி) போன்ற பட்டய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செய்ய விரும்பும் மாணவர்கள் https://cipet.onlineregistrationform.org/CIPET/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடைபெறும்.
CA படிப்புக்கு முதுநிலை அந்தஸ்து – யுஜிசி ஒப்புதல்!!
தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆம் வாரத்தில் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயப் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அவர்களை ஊக்குவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளார்.