தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை 2021 – செப்டம்பர் 8 முதல் துவக்கம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 19 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடுகள் செய்யபட்டது.
தமிழக பள்ளிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – கொரோனா தொற்று எதிரொலி!
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளங்களை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 8ஆம் தேதி இணையதளம் மூலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை வேளாண்மை கல்லூரி முதன்மையர் மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) முனைவர் மா.கல்யாண சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள், 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் செப்டம்பர் 8ஆம் தேதி புதன்கிழமை முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவிப்பின் படி, இந்த கல்வி ஆண்டு முதல் புதிதாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் தமிழிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்த தமிழ் வழி படிப்புகள் கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.