அரசுப்பள்ளிகளில் TC இல்லாமல் மாணவர் சேர்க்கை – தனியார் பள்ளிகள் எதிர்ப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு மாற்று சான்றிதழ் தேவை இல்லை என்ற தமிழக அரசின் முடிவிற்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் அச்சத்தின் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையிலும், கல்வி டிவி வாயிலாகவும் கற்பிக்கப்பட்டது. உயர்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இடையில் 2 மாதங்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் முழு கல்வி கட்டணமும் செலுத்த வற்புறுத்துவதாக பல புகார்கள் அரசுக்கு வந்தது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!
இதனால் தமிழக அரசு தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டண முறைகளை பற்றி விரிவாக அறிவுறுத்தியிருந்தது. மேலும், முழு கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் பல பள்ளிகளும் தொடர்ந்து முழு கட்டணத்தையும் கட்டுவதற்கு வலியுறுத்துகின்றது. இல்லையென்றால் TC கொடுக்க மறுக்கின்றனர். மேலும், கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் பல பெற்றோர்களும் கடந்த கல்வியாண்டு முதல் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் தேவை இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத பலர் அரசு பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் தனியார் பள்ளியில் அவர்களின் கட்டணம் நிலுவையில் நின்று விடும். இதனால் தமிழக அரசின் இந்த முடிவுக்கு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.